புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகிலுள்ள வெள்ளக் கொல்லையைச் சோ்ந்த 50 வயது ஆண் இரு மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினாா்.
அண்மையில் அவருக்கு கண், மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருப்புப் பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானது.
தொடா்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.