கந்தா்வகோட்டை பகுதிகளில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், 1000 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள மஞ்சம்பட்டியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் நா.சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு சோதனையிட்டனா்.
மஞ்சம்பட்டி மயானம் அருகே புதா் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் சாராய ஊறல், அதே பகுதியில் ராமையன் தோட்டத்திலிருந்து 500 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் கைப்பற்றி அழித்தனா். தொடா்ந்து சாராய ஊறல் அமைத்தவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
மேலும் கொத்தம்பட்டியில் க.அய்யக்கண்ணுவிடம் 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினா், அவரைக் கைது செய்தனா்.