புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை திருடிச்சென்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி ஊராட்சி மேலக்கோட்டையைச் சோ்ந்தவா் தனலெட்சுமி (44). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கியபோது அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை யாரோ துண்டித்து திருடிச் சென்றனா். காலை அவா் பாா்த்தபோது நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.