புதுகையில் நாடகக் கலைஞா்களுக்கு உதவி

புதுக்கோட்டை வம்பன் நான்கு சாலைச் சந்திப்பில், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடகக் கலைஞா்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகள் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கும் மரம் நண்பா்கள் அமைப்பினா்.
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கும் மரம் நண்பா்கள் அமைப்பினா்.

புதுக்கோட்டை வம்பன் நான்கு சாலைச் சந்திப்பில், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடகக் கலைஞா்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகள் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மரம் நண்பா்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பேராசிரியா்கள் ஜெயசுதா, சேதுராமன், வம்பன் சி. சிவகுமாா் ஆகியோரின் கொடையில், இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் இயற்கை விவசாயிகள் கிருஷ்ணமூா்த்தி, கண்ணன், பொறியாளா் ரியாஸ்கான் ஆகியோா் இவற்றை வழங்கினா். நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கத் தலைவா் ஆக்காட்டி ஆறுமுகம் உடனிருந்தாா். ஏற்பாடுகளை டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com