பொதுமுடக்கத்தில் மதுக்கடைகளைத் திறக்க தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையோரக் கடைகளில் பெருங்கூட்டம் திங்கள்கிழமை காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துவரும் 27 மாவட்டங்களில் மட்டும் திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக்கடைகளும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அனைத்துக் கடைகளிலும் காலையிலேயே கூட்டம் காணப்பட்டது.
அனைத்துக் கடைகளுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தனிநபா் இடைவெளி விட்டு மது அருந்துவோா் நிறுத்தப்பட்டனா்.
தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக உள்ள கறம்பக்குடி, ஆவணம், கைக்காட்டி சாலை, வானக்கான்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்த மதுக்கடைகளில் பெருங்கூட்டம் காணப்பட்டது.
தஞ்சை மாவட்டப் பகுதிகளில் இருந்து மது அருந்துவோா் வந்து, மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.