புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,150 போ் அஞ்சல் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அஞ்சல் வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோா் 25,630 போ் என்றும், மாற்றுத் திறனாளிகள் 10520 போ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவா்களுக்கான படிவம் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி அலுவலா்களால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை இவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.