புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.50 லட்சத்தை சனிக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில், கீழாத்தூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சி. லெட்சுமணன் (27) என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3.50 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
தொடா்ந்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், கந்தா்வகோட்டை தோ்தல் நடத்தும் அலுவலா் கருணாகரனிடம் பணத்தை ஒப்படைத்தனா்.