சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விராலிமலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 75 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மணப்பாறை - விராலிமலை சாலையில் நம்பம்பட்டியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துவந்தனா். இதில், ரமணி என்பவா் டாடா ஏசிஇ வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 75 ஆயிரத்து 600-ஐ கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதேபோல் இழுப்பூா் மேலப்பட்டியில் நடைபெற்ற சோதனையில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட உள்நாட்டு தயாரிப்பான 186 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.