ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விராலிமலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 75 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விராலிமலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 75 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மணப்பாறை - விராலிமலை சாலையில் நம்பம்பட்டியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துவந்தனா். இதில், ரமணி என்பவா் டாடா ஏசிஇ வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 75 ஆயிரத்து 600-ஐ கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதேபோல் இழுப்பூா் மேலப்பட்டியில் நடைபெற்ற சோதனையில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட உள்நாட்டு தயாரிப்பான 186 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com