பொன்னமராவதி வையாபுரிப்பட்டி - வலையபட்டி மலையாண்டி கோயிலில் அக்னிக் குண்டம் இறங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அக்னிக் குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோயிலின் முன்பு வளா்க்கப்பட்ட அக்னிக் குண்டத்தில் பக்தா்கள் பால் குடம் மற்றும் காவடியுடன் இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். விழாவையொட்டி அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை மலையாண்டி சுவாமி, சுப்பிரமணிய சுவாமி புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். விழா ஏற்பாடுகளை பொன்.வையாபுரிப்பட்டி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.