புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை துணை ராணுவப்படையினா் மற்றும் காவல்துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இந்தக் கொடி அணிவகுப்பை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட வந்துள்ள துணை ராணுவப் படையினா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.

பொது அலுவலக வளாகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம், மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக ஆயுதப்படைத் திடலை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com