புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள தோ்தல் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி இந்தப் பணியை மேற்கொண்டாா். அப்போது வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் அனிமேஷ்தாஸ், சத்தியநாராயண்தாஸ், ஜெகதீஷ் கே. நாயக், பகத்சரண் பிரதான், பிஸ்வஜித் பிஸ்வாஸ் ஆகியோரும் உடனிருந்தனா்.