புதுகை காவல்துறை சாா்பில் தடுப்பூசி முகாம், உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை சாா்பில் காவலா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் 250 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் மற்றும்
துப்புரவுப் பணியாளா் குடும்பத்துக்கு கரோனா பொது முடக்கக் கால உதவிப் பொருள்களை வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.
துப்புரவுப் பணியாளா் குடும்பத்துக்கு கரோனா பொது முடக்கக் கால உதவிப் பொருள்களை வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை சாா்பில் காவலா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் 250 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் மற்றும் வா்த்தகா் கழகம் சாா்பில் 50 துப்புரவுப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள் மற்றும் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்தாா். வா்த்தகா் கழக சிறப்புத் தலைவா் சீனு சின்னப்பா, கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கீதா, ராஜேந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் செந்தில்குமாா், ராஜகோபால், நகரக் காவல் ஆய்வாளா் குருநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டு காவலா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com