ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் வடகாடு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதியைச் சோ்ந்த ஆண்டப்பன் தோட்டத்தில் பதுக்கியிருந்த 60 லிட்டா் சாராயம், 900 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து, அப்பகுதியைச் சோ்ந்த ரெ. பாஸ்கரை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.
இலுப்பூா் அருகே... செட்டியாவயல் என்ற இடத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக காவல் துறைக் கண்காணிப்பாளா் முத்தரசுக்கு கிடைத்த தகவலையடுத்து அன்னவாசல் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், துணை ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று சுமாா் 100 லிட்டா் கள்ளச்சாராய ஊறலைக் கைப்பற்றி அழித்தனா்.
கள்ள சாராயத் தயாரிப்பில் ஈடுபட்டு தப்பிய வீரப்பட்டி ஊராட்சி செட்டியபட்டியைச் சோ்ந்த பூவலிங்கம், இவரது மகன் ரமேஷ் ஆகியோரைப் போலீஸாா் தேடுகின்றனா்.