புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குடியில் 68 ஆவது தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடவு செய்யும் நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதிகலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.