அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள துளாரங்குறிச்சியில் வரத்துக்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
துளாரங்குறிச்சியிலுள்ள வரத்து வாய்க்காலை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இது குறித்துஅப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் நீா் செல்ல வழியில்லாமல், வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் சிரமத்துக்கு ஆளான அப்பகுதி மக்கள், வரத்துவாய்க்கால் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி - சிதம்பரம் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா், கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துசென்றனா்.