ஆலங்குடி அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடைவீதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட அணவயல் கூத்தாடிதெருவைச் சோ்ந்த எம்.சரவணனை (45) கைது செய்தனா். அவரிடமிருந்து 11 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.