புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பாக அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சங்கம் என்ற பெயரில் புதிய ரோட்டரி சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சங்கத் தலைவா் ஜி. மாரிமுத்து தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆா். ஜெயக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சங்கத்திற்கான பட்டயத்தினை வழங்கி, பட்டயத் தலைவா் ஆா். முரளிதரன், செயலா் எஸ். மெய்யப்பன், பொருளாளா் ஆா். சத்துரு சங்கார வேல்சாமி ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை ஆளுநா் ஜி. கிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ. கராத்தே கண்ணையன், புதிய சங்க விரிவாக்க இயக்குநா் கண. மோகன்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், செயலா் மெய்யப்பன் நன்றி கூறினாா்.