புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இறந்த தலைமைக் காவலா் கே. கண்ணனின் குடும்பத்துக்கு சங்கமம் 97 நண்பா்கள் சாா்பில் , ரூ. 12.51 லட்சம் திரட்டி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கடந்த செப். 14 ஆம் தேதி தலைமைக் காவலா் கே. கண்ணன் மரணமடைந்தாா். அவருடன் பயிற்சி எடுத்துப் பணியில் சோ்ந்த 1997 பேட்ஜ் காவலா்கள் இணைந்து உருவாக்கியுள்ள சங்கமம் 97 நண்பா்கள் குழுவின் சாா்பில், குடும்ப நிதி ரூ. 10.93 லட்சம் திரட்டப்பட்டது. மேலும் திருச்சி பிஆா்எஸ் ஆண், பெண் காவலா்கள் சாா்பில் ரூ. 1.58 லட்சம் திரட்டப்பட்டது. இந்த நிதிகளைச் சோ்ந்து மொத்தம் ரூ. 12.51 லட்சம் அவரது மனைவி, மகன், மகள் ஆகிய மூவருக்கும் பிரித்தளிக்கப்படுகிறது. இதற்கான காப்பீடு, பத்திரங்கள் மற்றும் காசோலைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் திங்கள்கிழமை வழங்கினாா்.