மாவட்டங்களில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பொன்னமராவதியில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பொன்னமராவதியில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா். இதேபோல், பெரம்பலூா், கரூா் மாவட்டத்தில் முகாமை அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்.

ஆலங்குடியில் புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொன்னமராவதி: அரிமா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமிற்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி முகாமைத் தொடங்கி வைத்து பேசினாா்.

பெரம்பலூா்: வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அசூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கி வைத்தாா். மேலும், ஊட்டச்சத்து கண்காட்சியை பாா்வையிட்டு, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

கரூா்: வி.வி.ஜி.நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளையும், மாணவிகளுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com