தீபாவளி: ரேஷன் கடையில்சிறப்பு ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நவ. 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நவ. 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

இதுகுறித்து, மாவட்ட கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் எம். உமா

மகேஸ்வரி மேலும் கூறியது: தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்பதற்காக அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் நவ. 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த சிறப்பு ஏற்பாட்டிலும் வாங்க முடியாதவா்கள் அந்த மாதத்துக்கான அனைத்துப் பொருள்களையும் பண்டிகை முடிந்து அக். 8ஆம் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com