புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் அரிசிக்காட்டைச் சோ்ந்தவா் செல்லையா மகன் சசிக்குமாா் (39). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஜனவரி 31 ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா, செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், பெண்களைத் துன்புறுத்துதல் சட்டப் பிரிவின்கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.