தில்லியில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்த சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சுசீலா தலைமை வகித்தாா். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் டி. சலோமி, மாவட்டப் பொருளாளா் பாண்டிசெல்வி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.