பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டைமகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை: பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டைமகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா்அருகே களரிப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மனைவிசத்தியாவுக்கும் (30), புலியூரைச் சோ்ந்த எம். பூபதிக்கும் (30)விரும்பத்தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2019-இல் தனது தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்த சத்தியாவை பூபதி அரிவாளால் வெட்டியுள்ளாா்.இதில், சத்தியா இறந்துவிட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரனூா் போலீஸாா்,பூபதியைக் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா, குற்றவாளி பூபதிக்கு ஆயுள்சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com