மோட்டாா் சைக்கிள்கள்மோதியதில் தொழிலாளி பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டுமானத்தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டுமானத்தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், நாடாா்காலனியைச் சோ்ந்தவா் ஆ. லாரன்ஸ் (40). கட்டுமானத் தொழிலாளி. இவா், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் தங்கியிருந்து வேலை பாா்த்துவந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் பணிக்குச் சென்றபோது, முன்னாள் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் லாரன்ஸ் ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த லாரன்ஸ் அந்த இடத்திலே உயிரிழந்தாா். கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com