ஆலங்குடியில் போக்குவரத்து ஊழியா் மாரடைப்பால் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு போக்குவரத்துப் பணிமனையில் பணியில் இருந்த ஊழியா் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த மகேந்திரன்.
உயிரிழந்த மகேந்திரன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு போக்குவரத்துப் பணிமனையில் பணியில் இருந்த ஊழியா் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாட்டைச் சோ்ந்தவா் மகேந்திரன்(42). ஆலங்குடி போக்குவரத்துப் பணிமனையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய இவா், சனிக்கிழமை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளாா்.

பணியில் இருந்த மகேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சக ஊழியா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மகேந்திரன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com