பெரம்பலூா் மாவட்டத்தில் திருடு போன 131 செல்லிடப்பேசிகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செல்லிடப்பேசிகள் திருடு போனதாக 150 புகாா்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை தொடா்ந்து 131 செல்லிடப்பேசிகள் பல்வேறு நபா்களிடமிருந்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சுப்பிரமணி, ஆய்வாளா் கலா ஆகியோா் செல்லிடப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.