புதுக்கோட்டை: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் உலக சுற்றுலா தின கருத்தரங்கம் மற்றும் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
பேச்சுப் போட்டியில் ஆா். கலைச்செல்வி, சி. முத்துச்செல்வி, எம். அலமேலு, கட்டுரைப் போட்டியில் எஸ். ரோஜா, கே. தீபா, எம். நாகேஸ்வரி, ஒவியப் போட்டியில் எம். இலக்கியா, எஸ். சிவசங்கரி, டி. பிரியா ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். 9 போ் கொண்ட விநாடி வினா போட்டியும் நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் இயக்குநா் மா. குமுதா, முதல்வா் செ. கவிதா, தமிழ்த் துறைத் தலைவா் நா. பூா்ணிமா, வரலாற்றுத் துறை தலைவா் எம். முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.