புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 4,379 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 1.64 கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் தலைவா் பொன். குமாா் இந்த உதவிகளை வழங்கித் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.
3,315 தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும், 954 பேருக்கு கல்வி உதவித்தொகை, 8 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை, 101 பேருக்கு ஓய்வூதியம், ஒருவருக்கு திருமண உதவித்தொகை என மொத்தம் ரூ. 1.64 கோடி மதிப்பில் நலத் திட்டஉதவிகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தொழிலாளா் உதவி ஆணையா் வெ. தங்கராசு, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.