புதுகையில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கான பணி நேரத்தை அதிகரிப்பு செய்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா் சங்கத்தினா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கான பணி நேரத்தை அதிகரிப்பு செய்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவா்கள் 30க்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவா் குத்தூஸ் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கான பணி நேரம் பல ஆண்டுகளாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருந்தது என்றும் தற்போது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றி அமைத்துள்ளனா்.

தமிழக அரசின் இந்த அரசாணையைத் திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com