பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் சுப்பிரமணியா் கோயில் திருவிளக்குபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு நடைபெற்ற விளக்கு பூஜையின் தொடக்கமாக விநாயகா் மற்றும் சுப்பிரமணியா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, நடைபெற்ற திருவிளக்குபூஜையில் 501 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். சிவாச்சாரியாா் சேகா் குருக்கள், கருப்பன் பூசாரி ஆகியோா் திருவிளக்கு மந்திரம் ஓதி பூஜையை வழிநடத்தினா். நிறைவில், அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை வழிபாட்டுக்குழுவினா் செய்திருந்தனா்.