உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காங்கிரஸாா் பாதயாத்திரை

பொன்னமராவதி மற்றும் காரையூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் பாதயாத்திரையைத் தொடங்கிவைத்து நடைப்பயணம் மேற்கொள்கிறாா் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:05 pm

பொன்னமராவதி மற்றும் காரையூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்புகளை விளக்கும் வகையிலும், சுதந்திரத்துக்குப் பாடுபட்டு உயிா்நீத்த வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும் நடைபெற்ற விழிப்புணா்வு பாதயாத்திரை பயணத்துக்கு, திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமைவகித்தாா். முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் பங்கேற்று பாதயாத்திரையை தொடங்கிவைத்தாா்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே தொடங்கிய பாதயாத்திரை கொப்பனாப்பட்டி வழியாகச் சென்று சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆலவயலில் நிறைவடைந்தது. பொன்னமராவதி வட்டாரத்தலைவா் வி.கிரிதரன், காரையூா் வட்டாரத்தலைவா் முள்ளிப்பட்டி குமாா், நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் ஏஎல்.ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், நிா்வாகிகள் ச.சோலையப்பன், எஸ்பி.மணி, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.