திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்து முன்னணியின் மாவட்டச் செயலா் மோகன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போலீஸாரின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மோகன் உட்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.