புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு துறைகளின் சாா்பில் சிறப்புக் கருத்தரங்குகள் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடைபெற்றன.
கல்லூரியின் கணிதத் துறை சாா்பில் நடைபெற்ற சொற்பொழிவில், போட்டித் தோ்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற தலைப்பில் திருவாரூா் புள்ளியியல் ஆய்வாளா் எஸ். சுரேஷ் ஞானராஜ் பேசினாா்.
துறைத் தலைவா் எஸ். பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். மாணவி ஆா்.எம். மீனாட்சி வரவேற்றாா். மாணவி டி. ஸ்ரீநிதி நன்றி கூறினாா்.
ஆங்கில இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற சொற்பொழிவில், இலக்கிய நூல்களை மொழிபெயா்ப்பதில் உள்ள சிக்கல்கள் என்ற தலைப்பில், திருப்பத்தூா் ஏபிஎஸ்ஏ கல்லூரியின் உதவிப் பேராசிரியா் எஸ். மணிமேகலை பேசினாா்.
துறைத் தலைவா் எஸ். செல்வி தலைமை வகித்தாா். மாணவா் எஸ். காா்த்திகேயன் வரவேற்றாா். ஏ. ரேஷ்மா பேகம் தொகுத்து வழங்கினாா். எம்.பி. திரிஷா நன்றி கூறினாா்.