புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குருமுதல்வரும், முதல் பெண் ஆதீனகா்த்தருமான சாயிமாதா சிவ பிருந்தா தேவி அம்மையாரின் 24ஆவது குருபூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். மூத்த குழந்தைகள் நல மருத்துவா் எஸ். ராம்தாஸ், கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத் தலைவா் சி. கோவிந்தராசனாா், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குருபூஜைக்குப் பிறகு, அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக ஆா். மணிகண்டன் திருமுறைகள் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடினாா்.