பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கந்தா்வகோட்டையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.

கந்தா்வகோட்டையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஊராட்சி செயலா் வாசுதேவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி. ஸ்ரீதரன், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ராஜாமுகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனக் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனா். காந்தி சிலை முக்கம், மாரியம்மன் கோயில்தெரு , பெரிய கடைவீதி, தஞ்சை- புதுகை சாலை வழியாக ஒன்றிய அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. ஒன்றிய அலுவலா்கள், சுய உதவிக் குழுவினா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com