ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமான உணவு வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கருணாகரன் தலைமை வகித்தாா். அறந்தாங்கி தனி வட்டாட்சியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியா், விடுதி நிா்வாகத்தினா், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். இதில், உயா் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும், மாணவா்களுக்கு தரமான உணவுகளை விடுதி நிா்வாகத்தினா் வழங்க நடவடிக்கை வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com