திருநெல்லிவயலில் கால்நடை சுகாதார முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தினையாகுடி ஊராட்சிக்குள்பட்ட திருநெல்லிவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தினையாகுடி ஊராட்சிக்குள்பட்ட திருநெல்லிவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் சத்யாமூா்த்தி தொடங்கி வைத்தாா். முகாமில், கலந்து கொண்ட கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிறப்பாக கன்று மற்றும் பசுக்களை பராமரித்த 6 விவசாயிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஒன்றியக் குழு உறுப்பினா் சி. கணேசன், கால்நடை உதவி மருத்துவா் சி. சிலம்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com