பொன்னமராவதி கோயில்களில் சங்காபிஷேக விழா

பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதுபோல பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சங்காபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com