பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிச. 6) புதுக்கோட்டையில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் ஏ. ஜகுபா்அலி தலைமை வகித்தாா்.
மாநிலப் பொதுச் செயலா் எஸ். அகமது நவவி, மாவட்டத் தலைவா் எச். ஸலாஹூதீன், துணைத் தலைவா் முஹைதீன் தாஹா, பொருளாளா் அப்துல்மஜீத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பாவாணன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை வலுவாக அமலாக்கி அனைத்தையும் அரசும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.