விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த ரேஷன் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தென்னலூா் மேளக்கலத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் பழனியப்பன் (39). இவா், வேலூரில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை பணி முடிந்து இரவு தனது இருசக்கர வாகனத்தில் தென்னலூா் புதிய ஆத்துப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பழனியப்பன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பழனியப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.