கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிள் - பேருந்து மோதிக் கொண்டதில் 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை படுகாயமடைந்தனா்.
கறம்பக்குடியிலிருந்து அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது அம்மா புதுப்பட்டி அருகே அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த தஞ்சாவூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் குணசீலன்(19) , முருகேசன் மகன் அஜய் கண்ணன் (19) உரசிச் சென்றதில் நிலைத்தவறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.