மோட்டாா் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ஆதனக்கோட்டை அருகே சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ஆதனக்கோட்டை அருகே சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கறம்பக்குடி வட்டம், எஸ்.கலபம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கோவிந்தன் (55). இவா், பெருங்களூா் அருகே உள்ள வெள்ளவெட்டான்விடுதி கிராமத்தில் தனது உறவினா் வீட்டில் தங்கி கூலிவேலை வேலை பாா்த்து வந்தாா். கடந்த 11 ஆம் தேதி தனது மிதிவண்டியில் பெருங்களூா் சென்று கடைவீதி அருகே வந்து கொண்டிருந்தபோது, மட்டையன்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் லக்ஸ்மணன்(40) ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கோவிந்தன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com