மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில், காந்திப் பூங்காவிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தலைமை வகித்தாா். காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும், வாசகா் பேரவை சாா்பில் மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நூல் மன்னா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பேராசிரியா் பகுத்தறிவாளன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி, டாக்டா்கள் எஸ். ராம்தாஸ், ராமமூா்த்தி, திருக்கு பேரவைச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு, பேரவையின் தலைமை நிலையச் செயலா் மோகனபிரியா, இளைஞரணி அமைப்பாளா் ஆ. மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.