பள்ளி மாணவா்களை பங்கேற்கச் செய்ய அறிவுரை

புத்தகத் திருவிழாவில் அதிக மாணவா்களைக் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

புத்தகத் திருவிழாவில் அதிக மாணவா்களைக் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

புத்தகத் திருவிழாவுக்கான விளம்பரப் பதாகைகளை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்குவதற்ககா நடைபெற்ற கூட்டத்தில் அவா் இதனை வலியுறுத்தினாா்.

புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கி பள்ளிகளில் நூலகங்களை அமைக்கவும் முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து அவா் வெளியிட்ட விளம்பரப் பதாகைகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் மஞ்சுளா, மணிமொழி, ராஜாராமன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் மணவாளன், வீரமுத்து , குமரேசன் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com