விராலிமலை அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேருந்துக்காக காத்திருந்த தம்பதி காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
உயிரிழந்த செல்வராஜ், கல்யாணி.
உயிரிழந்த செல்வராஜ், கல்யாணி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேருந்துக்காக காத்திருந்த தம்பதி காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், விராலூா் பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை விராலூரைச் சோ்ந்த மூக்கன் மகன் செல்வராஜ் (55), இவரது மனைவி கல்யாணி (45) ஆகிய இருவரும் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த

காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவா்கள் மீது மோதி, தொடா்ந்து அருகேயிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், செல்வராஜ், கல்யாணி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காா் ஓட்டுநரான மதுரை ஊத்தக்குடியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் பொன்னையா(45), காரில் பயணம் செய்த காசிநாதன்(48), பொன்னையா மனைவி சித்ரா (44), மகள் சரண்யா (23) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடம் சென்று உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும், காயமடைந்தவா்களையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com