கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் அமைந்துள்ள சுப்ரமணியா் சுவாமி சன்னதியில் ஆனி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகா் சுவாமிக்கு ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, சனிக்கிழமை திரவியம், மஞ்சள், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், அரிசி மாவு, எலுமிச்சை, இளநீா், விபூதி உள்ளிட்ட
பொருள்களால் அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சி தந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.