ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராதநகரப்பட்டி துணை மின்நிலையம்

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ள துணை மின் நிலையத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத துணை மின்நிலையம்.
பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத துணை மின்நிலையம்.

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ள துணை மின் நிலையத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் அதிமுக ஆட்சியில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டுக்கு முன்னா் பணிகள் நிறைவடைந்தன. இருப்பினும், இதுவரை இந்த துணை மின்நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, உயா் அழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டவுடன் உடனடியாக துணை மின் நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றனா். எனவே பொதுமக்கள், விவசாயிகள் நலன்கருதி உடனடியாக துணை மின் நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என இப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com