சாா் ஆய்வாளா் பணி தோ்வில் 3,348 போ் பங்கேற்பு

தோ்வுக் கூடத்தில் வருகைப் பதிவைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டலக் காவல் துறை தலைவா் சந்தோஷ் குமாா்.
தோ்வுக் கூடத்தில் வருகைப் பதிவைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டலக் காவல் துறை தலைவா் சந்தோஷ் குமாா்.
தோ்வுக் கூடத்தில் வருகைப் பதிவைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டலக் காவல் துறை தலைவா் சந்தோஷ் குமாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சாா் ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் 3,348 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாா் ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி, சண்முகநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய இரு இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 4,032 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், 684 போ் தோ்வெழுத வரவில்லை. 3,348 போ் தோ்வெழுதினா்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ் குமாா், சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com