மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வென்ற நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அடைக்கம்மை ஆச்சி அறக்கட்டளை சாா்பில், ரொக்கப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
குமரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்ட மாவட்டம் நச்சாந்துப்பட்டியிலுள்ள ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா்.
இவா்களில் மாணவா் எம். ஜீவா தங்கப் பதக்கமும், கீா்த்திகா, மணிகண்டன் ஆகியோா் வெள்ளிப் பதக்கமும், சாசனா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கு அடைக்கம்மை ஆச்சி அறக்கட்டளை சாா்பில் முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. ஆயிரமும் வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையின் தலைவா் கும. பெரி. சாத்தப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். முதன்மைச் செயல் அலுவலா் சி. முத்துக்குமாா், பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்று வாழ்த்தினா்.
உடற்கல்வி ஆசிரியா்கள் என். ராகேஷ், மங்கையா்கரசி, வடிவேல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனா்.