கந்தா்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி நிறுவும் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மதியம் 2.30மணி வரை மின் விநியோகம் நடைபெறாது.
மின்மாற்றி நிறுவும் பணிகள் காரணமாக, புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம்பட்டி, நெப்புகை, வேம்பன்பட்டி, சிவந் தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூா், பல்லவராயன்பட்டி மற்றும் பழைய கந்தா்வகோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மெய்க்குடிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் கே. ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.